அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16 பிப்ரவரி 2012

அதிகமா சாப்பிடாதீங்க

அதிகமாக சாப்பிடுவதும், மாசடைந்த சுற்றுச் சூழலில் வசிப்பதும் மூளையை பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் தலைமைச் செயலகத்தை செயலிழக்கச் செய்பவைகள் பற்றி மூளை நரம்பியல் நிபுணர்கள் கூறியுள்ளவை உங்களுக்காக.

அதிகமா சாப்பிடாதீங்க

மிக அதிகமாக உணவு உண்பதால் மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். மேலும் அதிக அளவில் சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

கட்டாயம் காலை உணவு

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை பாதிப்பிற்கு காரணமாகும். மேலும் புகை பிடிப்பதால் மூளை சுருங்குகிறது இது அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

15 அக்டோபர் 2011

காய்கறிகள்,பழங்கள் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது

இந்தியாவில் உள்ள விவசாய நிலங்களில், அதிகளவில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுவதால், காய்கறிகள் மற்றும் பழங்கள் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் உள்ள விவசாய நிலங்களில், தடை செய்யப்பட்ட ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து, டில்லியில் உள்ள "நுகர்வோர் குரல்' என்ற தன்னார்வ அமைப்பு டில்லி, பெங்களூரு மற்றும் கோல்கட்டா ஆகிய நகரங்களில் உள்ள சில்லறை மற்றும் மொத்த காய்கறி கடைகளில் விற்கப்படும் காய்கறிகளை ஆய்வு செய்தது.இதில், ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால், இந்தியாவில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிக விஷத்தன்மை கொண்டதாக மாறிவருவது தெரியவந்துள்ளது

. ஐரோப்பிய நாடுகளில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள விஷத்தன்மையை விட, 750 மடங்கு அதிகமாக இந்திய காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளது.இந்த நச்சுத்தன்மை கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ளும் போது, நரம்பு தொடர்பான நோய்கள், தோல் நோய்கள் உள்ளிட்டவை ஏற்படுகின்றன.


இதுகுறித்து, ஆய்வுக் குழுவை சேர்ந்த சிஷர் கோஷ் கூறியதாவது:
சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட ஐந்திற்கும் மேற்பட்ட ரசாயன உரங்களை இந்திய விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனால், காய்கறிகள் நச்சுத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது. தக்காளி, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, சுரைக்காய், முட்டை கோஸ், பரங்கிக்காய், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளும், சில வகை பழங்களும் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது.இதனால், அதை உண்பவர்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, இத்தகைய தடை செய்யப்பட்ட உரங்களை பயன்படுத்தை தடுக்க, அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இயற்கை விவசாயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு சிசர் கோஷ் கூறினார்.

ஸ்கைப் நிறுவனத்தை வாங்கிய மைக்ரோசாப்ட்!

நியூயார்க்: இன்டர்நெட் தொலைத் தொடர்பு நிறுவனமான ஸ்கைப் நிறுவனத்தை முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் ரூ. 40,000 கோடிக்கு வாங்கியுள்ளது.

இன்டர்நெட் மூலமான தொலைபேசி சேவையில் முன்னணியில் இருப்பது ஸ்கைப். வீடியோ சேட், இன்டர்நெட்டிலிருந்து தொலைபேசியில் பேசுவது, இன்டர்நெட் மூலமான வீடியோ கான்பரன்சிங் உள்ளிட்ட சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. உலகில் பல மில்லியன் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன இந்த சேவைகள்.

இந் நிலையில் இந்த நிறுவனத்தை ரூ. 40,000 கோடிக்கு வாங்கியுள்ளது மைக்ரோசாப்ட். இதையடுத்து ஸ்கைப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டோனி பேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, ஸ்கைப் செயல்பாட்டை நிர்வகிப்பார்.

2003ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஸ்கைப் நிறுவனத்தின் சேவைகளை உலகம் முழுவதும் 633 மில்லியன் பேர் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அணுமின் திட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வலுவான வழக்கு!

புதுடெல்லி கூடங்குளம் உள்ளிட்ட புதிய அணு மின் திட்டங்களை ரத்து செய்யக் கோரி, முன்னாள் அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஒன்றிணைந்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளனர்.

கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகளை நிறுத்தக் கோரி மேற்கொள்ளப்பட்டு வரும் மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுவாகி வருகிறது.

இந்த நிலையில், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி, பிரதமரின் முன்னாள் செயலாளர் கே.ஆர்.வேணுகோபால், மத்திய அமைச்சரவை முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம், கடற்படை முன்னாள் தலைமை தளபதி எல்.ராமதாஸ், அணு விஞ்ஞானி பி.எம்.பார்கவா, பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணின் பொதுநல வழக்குகளுக்கான மையம் உள்பட 14 பேர் தாக்கல் செய்துள்ள மனுவின் விவரம்:

நாட்டில் தற்போது இயங்கிவரும் அணு மின் நிலையங்கள் மற்றும் பணிகள் தொடங்கப்படவுள்ள அணு மின் நிலையங்களை, தன்னிச்சையான அரசு சாராத நிபுணர் குழுவை நியமித்து, அந்தக் குழு மூலமாகவோ அல்லது அந்தக் குழுவின் நேரடி மேற்பார்வையிலோ, அனைத்து அணுமின் நிலையங்கள் உரிய பாதுகாப்பாக உள்ளனவா? என்று முறையாக ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, அந்தந்தப் பகுதி மக்களிடம் அர்த்தமுள்ள சரியான கருத்து கணிப்புகள் நடத்தி, பின்னர் அவை இயங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

28 செப்டம்பர் 2011

செல்போன் நிறுவனங்களின் தேவையற்ற விளம்பர அழைப்புகளுக்குத் தடை

டெல்லி:செல்போன் இணைப்புச் சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விளம்பரங்கள் சேவை விபரங்கள், அழைப்பு திட்டங்கள் என இடையிடையே அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகின்றன. இதனால், சிலர் கட்டண சேவைகளில் சிக்கி பணத்தை இழப்பதும் உண்டு.

இந்த பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. “தேவையற்ற அழைப்புகளின் பதிவு” (Registration of unwanted calls) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தேவையற்ற அழைப்புகளை விரும்பாத நுகர்வோர் இதில் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இதில் பதிவு செய்ய 1909 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது http://www.nccptrai.gov.in   என்ற இணையதளத்தில் சென்று உங்கள் செல்போன் எண்ணை பதிய வேண்டும். நீங்கள் பதிவு செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு விளம்பர அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்-கள் வந்தால் நீங்கள் பயன்படுத்தும் செல்போன் நிறுவனத்திடம் புகார் கொடுக்கலாம். அவ்வாறு புகார் கொடுக்கையில் விளம்பர அழைப்பு வந்த நேரம், தேதி ஆகியவற்றையும் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் ஆன்லைனிலும் புகார் கொடுக்கலாம்.

தொல்லை செய்ய வேண்டாம் என்று பதிவு செய்தவர்களுக்கு விளம்பர அழைப்புகள் வந்தால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.2.5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

20 செப்டம்பர் 2011

கூடங்ளம் விவகாரம்: இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கும் மேதா பட்கர்

கூடங்குளம்: கூடங்குளம் பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் மேதா பட்கர் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை தொடர்பாக அவர் இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசவிருக்கிறார்.

நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரையில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகளை வலியுறுத்தி 101 பேர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். கூட்டப்புளி, பெருமணல், கூடன்குளம், இடிந்தகரை, கூத்தக்குளி போன்ற பல்வேறு கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று 9-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை.

உவரி, கூடுதாழை, கூட்டபானை, கூத்தன்குழி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் கஞ்சி தொட்டி திறக்கப்பட்டன. கூடன்குளம் மற்றும் இடிந்தகரையை சுற்றியுள்ள குக்கிராமங்களில் பல்வேறு இடங்களில் கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. நேற்று நடந்த போராட்டத்தில் சமூக ஆர்வலரும், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு தலைவருமான மேதா பட்கர், மதுரை மறை மாவட்ட பேராயர் பீட்டர் பெர்னான்டோ மற்றும் கேரளாவைச் சேர்ந்த பல்வேறு இளைஞர், மகளிர் அமைப்புகள் போராட்டத்தில் பங்கேற்றன.

17 செப்டம்பர் 2011

சாலை விபத்து கற்றுத் தரும் பாடம்

 சமீபகாலமாக இந்தியாவில் 1,000 சிசி திறன் கொண்ட பைக்குகளை விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதற்கேற்ப, சூப்பர் பைக்குகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. சூப்பர் பைக்குகளை ஓட்டுவதற்கு ஏற்ற சாலை வசதிகளோ, பயிற்சி மையங்களோ நம் நாட்டில் இல்லை என்பது முக்கிய காரணம்.

மேலும், சாதாரண ரக பைக்குகளை ஓட்டுவதற்கும், சூப்பர் பைக்குகளை ஓட்டுவதற்கும் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், அதை சூப்பர் பைக் வாங்குபவர்கள் புரிந்துகொள்ளததால்தான் இதுபோன்று விபத்துக்களில் சிக்கி உயிரை விலையாக கொடுத்து விடுகின்றனர்.

இருப்பினும், இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.

சூப்பர் பைக்குகள் மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல்வாய்ந்த எஞ்சின்களுடன் வருகின்றன. இந்த பைக்குகளின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கே முறையான பயிற்சி கண்டிப்பாக தேவை.

எனவே, சூப்பர் பைக் வாங்குவதற்கு முன் உரிய பயிற்சி மையத்தில் சூப்பர் பைக் டிரைவிங் செய்வது குறித்த ஆலோசனைகளையும், நேரடி பயிற்சியையும் பெற்ற பின் சூப்பர் பைக் வாங்குவது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

13 செப்டம்பர் 2011

பிரான்ஸ் அணு உலையில் அணுக்கசிவு வெடிப்பால் ஒருவர் பலி

பாரிஸ்:பிரான்ஸ் நாட்டில் உள்ள அணு உலையில் கதிர்வீச்சு கசிவால் வெடிப்பு ஏற்பட்டது.

‌தெற்கு பிரான்ஸ் பகுதியில் உள்ள மார்குலே அணு உலையில் நேற்று அணுக்கதிர் கசிவின் காரணமாக வெடிப்பு நிகழ்ந்தது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் பணியாளர் ஒருவர் பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர். அணுக்கதிர் கசிவு நிறுத்தப்பட்டது எனவும் கதிர்வீச்சு அபாயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன் 

21 ஆகஸ்ட் 2011

முதல் இரவு

உலகில் பருவ வயதைத் தாண்டிய, சிந்திக்க தெரிந்த எல்லோறும் ஒரு முதல் இரவுக்காக காத்திருக்கிறார்கள்.

திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உலக வாழ்க்கையில் ஒரே ஒரு உதலிரவே கிடைக்கின்றன, பலர் அந்த முதலிரவை திருமணத்திற்கு முன்னர் அப்படி, இப்படி என்று கற்பனை பண்ணிக்கொன்று அந்த நாளைக்காக காத்திருக்கின்றார்கள்,

இன்றைய இளைஞர் யுவதிகள் அனைவரும் உடலுரவுக் கலையைப் பற்றி திருமணத்திற்கு முன்னரே மஞ்சள் பத்திரிகைகள்,
ஆபாச திரைப்படங்கள், ஆபாச இணையத்தள பக்கங்கள், ஆபாச கல்வித்திட்டங்கள், மற்றும் நண்பர்கள் மூலம் அறிந்து கொள்வதனால் அந்த விடயத்தில் உசாராக நடைபோட எத்தனிக்கின்றார்கள்,

இந்த விடயத்தில் நகர் புற பெண்கள் உசாராக இருந்தாலும் கிராமத்துப் பெண்கள் மற்றும் அமைதியான ஒழுக்கமான சூழலில் வாழும் இளம் பெண்களும் அவர்களுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற நான்கு குணங்களையும் முறையே கொண்டவர்களாக இருக்க முனைவதனால் இதில் கொஞ்சம் மந்த கெதிதான்.

எவ்வளவு தான் இத்துரையில் உசாராக இருந்தாலும் அந்த நாள் நெருங்கும் போது எல்லா இளைஞர், யுவதிகளும் டிம்மாகிவிடுகின்றார்கள்.

சிலர் தாங்கள் பல வருடங்களாக காத்திருந்த, கற்பனை பண்ணியவாறு அந்த முதலிரவை ஒரெ முரையில் காம உணர்ச்சிகளையும் காமப் பசியையும் தீர்த்துக்கொள்ளலாம் என நினைக்கின்றனர், இது மிகவும் தவரானதாகும்.

21 ஏப்ரல் 2011

இணையம் என்னும் வசியக்காரன்….ஒரு பகீர் ரிப்போர்ட்!

இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேர் இணையத்தை விட்டு மீள முடியாமல் இருக்கிறோம்? கேள்விக்கு விடையை கொடுக்க அவரவரின் மனோநிலைதான் முடியுமென்றாலும் கழுகு தனது சிறகடிப்பில் கண்டறிந்த விடயங்களை இக்கட்டுரையின் மூலம் உங்களுக்கு கொடுப்பதில் பெருமிதம் கொள்கிறோம்…!

எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் நன்மைக்கே, நன்மைக்கே.. என்று கண்டுபிடிக்கப் பட்டிருந்தாலும், அதனோடு சில தீமைகளையும் சேர்ந்தே வந்துவிடுகிறது. அவற்றுள் இந்த இண்டெர்னெட் என்பது மறுக்கவொன்னா நன்மைகளையும், சேர்க்கவொன்னா தீமைகளையும் ஒருங்கே பெற்றிருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதன் முக்கியத்துவம் அதிகம் இருந்தாலும் இதற்கு அடிமைபட்டுக் கிடப்பது எவ்வகையில் நியாயம்? அது தாங்க இண்டெர்னெட் அடிக்‌ஷன்..

இண்டெர்னெட் அடிக்‌ஷன் என்றால் என்ன?

16 ஏப்ரல் 2011

பெண் குழந்தை வேண்டுமா?

டென்மார்க்: பெண் குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள் பழம் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும் என்று டென்மார்க் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பெண்கள் கருத்தரிப்பதற்கு சில வாரங்களுக்கு முன் கால்சியம், மெக்னீஷியம் அதிகமுள்ள பச்சைக் காய்கறிகளை உண்டால் பெண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதற்காக அவர்கள் சில பெண்களை வைத்து ஆய்வு செய்ததில் பச்சைக் காய்கறி உண்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு பெண் குழந்தை பிறந்தது.

அதே சமயம் பொட்டாஷியம், சோடியம் அதிகமுள்ள வாழைப்பழம், உருளை அதிக அளவில் உண்டவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் இது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

பெண்ணின் வளர்ச்சியை தடுக்கும் பெண் அதிகாரிகள்

உயர்பதவியில் இருக்கும் பெண்கள் தங்களுடன் பணிபுரியும் சக பெண் ஊழியர்களுக்கு சலுகைகள் தருவதற்கு விரும்புவதில்லை என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம் தனக்கு போட்டியாக அந்தப் பெண் வந்து விடுவாரோ என்ற எச்சரிக்கை உணர்வுதான் என்கிறது அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்று.

அமெரிக்காவில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் சின்சினாட்டியில் உளவியல் துறையில் பணிபுரியும் டேவிட் மவுமி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மிகப்பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் பெண் உயரதிகாரிகள், தனக்கு கீழ்பணியாற்றும் பணியாற்றும் ஊழியர்களிடம் எவ்வாறு நடந்த கொள்கிறார்கள் என்பது குறித்து அமெரிக்காவில் பணிபுரியும் 2000 ஊழியர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன்படி வெளியிடப்பட்ட ஆய்வு முடிவின் விபரம்.

பெண்களே முன்னிலை

மிகப்பெரிய நிறுவனங்களில் உயரதிகாரிகளாக பணிபுரிபவர்களில் ஆண்களை விட பெண்களே அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் அதிக அக்கறையும் ஆர்வமும் எடுத்துக்கொள்கின்றனர்.

06 ஏப்ரல் 2011

ஒரே நேரத்தில் மூன்று மின்னஞ்சல்களை திறக்க

கூகுள் ஜிமெயிலில் புதிய சிறப்பம்சமாக ஓரே நேரத்தில் இரண்டு மின்னஞ்சல் முகவரிகளில் நுழைந்து இரண்டு இன்பாக்ஸ்களை கையாளலாம்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது.

1. முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.

2. நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்தவுடன் Settings செல்லவும். பின்பு Accounts and Import செல்லவும். பின்பு அங்கு இருக்கும் Google Accounts Settings செல்லவும்.

3. அங்கு Multiple Sign In என்பதற்கு நேராக off என்று இருக்கும். பின்பு Edit க்கு செல்லவும்.

4. பின்பு அங்கு On – Use multiple Google Accounts in the same web browser என்னும் Option தேர்வு செய்யவும். அதன் கீழ் இருக்கும் அணைத்து Option களையும் தேர்வு செய்யவும். பின்பு Save செய்துவிடுங்கள். ஒருமுறை Logout செய்யவும்.

03 ஏப்ரல் 2011

குவாசர்கள்.........

இதுவரை நமது அறிவியல் வளர்ச்சியினால் உருவாக்கப்பட்டுள்ள கருவிகளாலும் ஆராய்ச்சிகளாலும் நமது கண்ணுக்கும், நமது கருவிகளின் புலனுக்கும் தெரியக்கூடிய எல்லை வரையில் பல விந்தைப் பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 1963 இல் கண்டுபிடிக்கப்பட்ட குவாசர்கள் (Quasars) புதிரானவை. குவாசர் என்பது ஒரு கூட்டுச் சொல் ஆகும். குவாசர்கள் தோற்றத்தில் ஒரு விண்மீனைப் போன்றே காட்சியளிக்கின்றன. இந்த குவாசர்கள் பல கோடி ஒளி ஆண்டு தொலைவில் உள்ளன. இக்குவாசர்கள் பல்வேறு அளவுகளில் மிகுதியாக ஒளியை உமிழ்கின்றன.

ஓர் ஒளித் தொலை நோக்கியைக் கொண்டு பார்த்தோமானால் குவாசர்கள் சாதாரண மங்கிய ஒரு விண்மீனைப் போன்றே காணப்படுகின்றன. ஆனால் வானொலித் தொலை நோக்கியைக் கொண்டு ஆய்ந்தோமானால் குவாசர்கள் வானொலி அலை மூலங்களாகவும் உள்ளது தெரிய வருகின்றது. அதாவது குவாசர்கள் வானொலி அலைகள் மற்றும் எக்ஸ் கதிர்களை ஒளியுடன் உமிழ்கின்றது. ஒரு குவாசரானது நமது அண்டத்தில் 1,00,000 இல் ஒரு பகுதி அளவுடையது. ஆனால் அது உமிழும் ஒளியானது நமது அண்டத்தின் ஒளியைக் காட்டிலும், 100 முதல் 200 மடங்கு அதிகமாகும். இதுவரை இது போன்று சுமார் 1500 குவாசர்கள் கண்டறியப்பட்டுள்ளன.

28 மார்ச் 2011

கடல் நீரில் கதிர் வீச்சு

ஜப்பானின் பாதிப்புக்குள்ளான ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தின் அருகே கடல் நீரில் அளவுக்கதிகமான அணுக் கதிர் வீச்சு காணப்படுவதாக அந்நாட்டின் அணு சக்தி பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது.

ஆபத்து விளைவிக்கக்கூடிய ஆரம்ப அளவை விட 250 மடங்கு அதிகமாக இப்பகுதி கடல் நீரில் கதிரியக்க அயோடினின் அளவு காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கரையிலிருந்து சுமார் முந்நூறு மீட்டர்கள் தள்ளி கடல் நீரில் கதிரியக்கம் அளக்கப்பட்டிருந்தது.

கதிரியக்கம் கடலில் கலந்ததன் காரணமாக அப்பகுதி கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை இல்லை என ஜப்பானிய அமைச்சரவையின் செயலர் யுகியோ எதானோ தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இப்பகுதி கடல்நீரில் காணப்பட்ட கதிரியக்க அயோடினின் அளவை விட தற்போது எட்டு மடங்கு அதிகமான அளவில் இது காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

26 மார்ச் 2011

கோப்புகளுக்கு கடவுச்சொல் இட்டு பூட்ட மற்றும் மறைத்துவைக்க..

கணினியை பயன்படுத்தும் பலரும் அவர்களுக்கென தனிப்பட்ட டேட்டாவினை கணினியில் சேமித்து வைத்திருப்போம். அதில் சில முக்கியமான தகவல்களும் அடங்கும், உதாரணமாக பேங்க் சம்பந்தமான டாக்குமெண்ட்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் ஆகியவை ஆகும். அவற்றை நாம் தனியே கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் உதவியுடன் மறைத்து வைத்திருப்போம் அவற்றை எளிதாக மீட்டெடுத்து விட முடியும். அவ்வாறு இல்லாமல் அந்த குறிப்பிட்ட தகவல்களை நம்முடைய ஒருவரின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும். ஒரே கணினியை பலரும் பயன்படுத்தும் நிலையில் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களிடம் இருந்து மறைத்து வைக்கவும் கடவுச்சொல் இட்டு பூட்டவும். சந்தையில் பல்வேறு மென்பொருட்கள் உள்ளன.

அவ்வாறு கோப்புகளுக்கு கடவுச்சொல் இட்டு பூட்டவும், மறைத்துவைக்கவும் சந்தையில் மென்பொருள் உள்ளது. ஆனால் அவையாவும் சிறப்புடையதாக இல்லை, ஒரு சில குறைபாடுகளுடன் உள்ளது. இதுபோன்ற குறைபாடுகள் எதுவும் இல்லாமல் சிறப்பான மென்பொருள் ஒன்று உள்ளது.

ஹேக்கிங் என்றால் என்ன?

இணையத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் “ஹேக்கிங்” (Hack) என்ற வார்த்தை அறியாமல் இருக்க மாட்டீர்கள் அப்படி நீங்கள் இதை தெரிந்து இருக்கவில்லை என்றால் இணையத்தை பயன்படுத்த போதுமான அறிவை நீங்கள் இன்னும் பெறவில்லை என்பதே நிஜம். எனவே ஹேக்கிங் பற்றி தெரியாதவர்களும் தெரிந்தவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய இடுகை இதுவாகும்.

ஹேக்கிங் என்றால் என்ன?

உங்களை அறியாமல் உங்கள் மூலமாகவே அல்லது உங்களுக்குத் தெரியாமல் உங்கள் மின்னஞ்சல், வங்கி மற்றும் பல இணையக் கணக்குகளின் கடவுச்சொல்லை (Password) திருடுவதே ஹேக்கிங் ஆகும்.

எதற்கு இதை செய்கிறார்கள்?

ஒரு சிலர் இதை பொழுதுபோக்காக செய்கிறார்கள், இன்னும் ஒரு சிலர் தங்களுக்கு பிடிக்காதவர்களின் கணக்கை முடக்க செய்கிறார்கள். ஒரு சிலர் பணத்துக்காக செய்கிறார்கள் அதாவது நீங்கள் பணம் கொடுத்தால் அவர்கள் நீங்கள் கூறும் கணக்கை ஹேக் செய்து கொடுத்து விடுவார்கள். இன்னும் ஒரு சிலர் மற்றவர்களின் வங்கிக்கணக்கை ஆட்டையை போட்டு பட்டை நாமம் சாத்தி விடுவார்கள்.

21 மார்ச் 2011

ஃபுகுஷிமா அணு உலைகளை மூடும் ஜப்பான்: பூகம்ப பலி 21 ஆயிரமாக உயர்வு

டோக்கியோ: ஜப்பானில் இரட்டை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள பழுதடைந்த அணு உலைகள் நிரந்தரமாக மூடப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த பேரழிவுகளில் பலியானோர் மற்றும் காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 21 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

ஜப்பானின் ஃபுகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலையத்தில் உள்ள முதல் மற்றும் இரண்டாவது அணு உலைகளில் மின்சார கேபிள் இணைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மின்சாரம் மூலம் உலைக்குள் நீர் செலுத்தும் பணி துவங்கியுள்ளது.

பிற உலைகளுக்கும் விரைவில் மின்சார இணைப்பு கொடுக்கப்படும். புளூட்டோனியம் மற்றும் யுரேனியம் எரிபொருட்கள் உள்ள 3வது உலையில் நேற்று அதிகாலை 3.40 மணி வரை 2 ஆயிரத்து 400 டன் நீர் ஊற்றப்பட்டது. 4வது உலையை குளிர வைக்க நேற்று 80 டன் நீர் ஊற்றப்பட்டது. நான்கு உலைகளிலும் உள்ள குளிரூட்டும் முறைகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவற்றில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சின் அளவும் குறைந்து கொண்டிருக்கிறது.

ஜோதிடத்தையும், வாஸ்துவையையும் தடைச்செய்யக் கோரிய மனுவை தள்ளுபடிச் செய்த நீதிமன்றம்

தானே:ஜோதிடமும், வாஸ்து போன்ற மூடநம்பிக்கைகளால் இந்திய மக்களில் ஒரு சாராரின் பணமும், நேரமும் வீணடிக்கப்படுகிறது. முட்டாள்தனமான இச்செய்கைகளால் மனிதர்கள் தங்களது பகுத்தறிவை பறிகொடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஜோதிடமும், வாஸ்து சாஸ்திரமும் தடைச் செய்யப்பட வேண்டுமெனக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை நீதிமன்றம் தள்ளுபடிச் செய்துவிட்டது.

ஜோதிடத்திற்கும், வாஸ்துவிற்கும் விஞ்ஞானரீதியான அடிப்படை இல்லை எனவும், பொதுமக்களை ஏமாற்றும் சூழலில் அவற்றை தடைச்செய்ய வேண்டுமென அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி ஜன்ஹித் மஞ்ச் என்ற அரசுசாரா நிறுவனம் ஒன்று பொது நல வழக்கை தொடுத்தது.

20 மார்ச் 2011

6 ஆண்டு பயணத்துக்கு பிறகு புதன் கிரகத்தை அடைந்தது விண்கலம்

நாசா: அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் 2004ம் ஆண்டில் ஏவிய ‘மெசஞ்சர்’ விண்கலம் 6 ஆண்டு பயணத்துக்கு பிறகு புதன் கிரகத்தை நேற்று சென்றடைந்தது. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன். இது பற்றிய ஆராய்ச்சிக்காக ‘மெரைனர்10’ என்ற விண்கலத்தை நாசா 1973&ல் அனுப்பியது. அதன் பிறகு, 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 3&ம் தேதி ‘மெசஞ்சர்’ என்ற விண்கலத்தை புதனுக்கு நாசா அனுப்பியது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் கேப் கேனவராலில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து டெல்டா2 ராக்கெட்டில் வைத்து மெசஞ்சர் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

பூமியில் இருந்து புறப்பட்டு வெள்ளி கிரகத்தை தாண்டி வினாடிக்கு 640 கி.மீ. என்ற வேகத்தில் சென்ற ராக்கெட் 6 ஆண்டு 7 மாதத்தில் சுமார் 790 கோடி கி.மீ. தூர பயணத்துக்கு பிறகு புதன் சுற்றுவட்ட பாதையை நேற்று சென்றடைந்தது. இதுபற்றி நாசா விஞ்ஞானிகள் கூறுகையில், ‘‘நாசா விஞ்ஞானிகளின் 36 ஆண்டு கால முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது.