நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான ஹசாரே அவர்களின் போராட்டம் வலுத்து வருகிறது ஆனால் தமிழகத்தில் எந்த பெரிய தாக்கமுமில்லை. அனைத்து மாநிலங்களிலும் குறிப்பாக வட மாநிலங்களில் இதற்கு மக்கள் பேராதரவு தந்து இருக்கின்றனர் ஆனால் இதைப்போல ஒரு தாக்கம் நமது மாநிலத்தில் இல்லையே எனும் போது மிக மிக ஆத்திரமாக இருக்கிறது.
புறக்கணிக்கும் ஊடகங்கள்
தமிழக ஊடகங்கள் எப்படி சீரழிந்து போய் இருக்கிறது என்பதற்கு தற்போதையே நிலையே சாட்சி. தொலைக்காட்சி செய்தி தாள்கள் எதிலும் இந்தப்போராட்டத்திற்கு ஆதரவு இல்லை. தினமலர், தினமணி மட்டுமே இன்றைய தலைப்பு செய்தியில் முக்கியத்துவம் கொடுத்து ஆறுதலை தந்து இருக்கிறது. தினமலர் மீது பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும் அதை நினைத்துப் பார்த்து பேசும் தருணம் இதுவல்ல. எந்த ஊடகமுமே இதற்கு உறுதியான ஆதரவு தராத போது இந்தபோராட்டத்திற்கு தினமலர் தினமணி கொடுத்த ஆதரவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
சன் டிவி செய்திகளில் நேற்றும் [7-4-2011] எதுவும் கூறவில்லை.. வெறுத்துப் போய் விட்டேன். இந்தியாவே இந்தப் போராட்டத்திற்காக அலறிக்கொண்டு இருக்கிறது ஆனால் எதுவுமே நடக்காத மாதிரி வழக்கமான செய்திகளை கூறிக்கொண்டு இருக்கிறார்கள் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல். எந்த அளவிற்கு கேவலமாக போய் கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.
மற்ற ஊடகங்கள் ஏன் இது பற்றி பெரிதாக பேசவில்லை? எதற்கு தயங்குகிறார்கள்? சராசரி குடிமகனைப் போல தயங்கும் ஊடகத்திற்கு இது கேவலமாக இல்லையா! கொஞ்சம் கூடவா சூடு சொரணை இல்லை. மக்களால் தான் அவர்கள் வளருகிறார்கள் ஆனால் இன்று மக்களுக்காக ஒரு போராட்டம் வெடித்து இருக்கும் போது ஏன் ஆதரவு தர மறுக்கிறார்கள். ஊடகங்கள் செய்திகளை அதுவும் இதைப்போல செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது முக்கிய கடமையில்லையா! ஏன் கூற மறுக்கிறார்கள்? ஏன் மக்கள் இது பற்றி தெரிந்து கொள்ள உதவ மறுக்கிறார்கள்?
கூறுபவர்கள் கூட எதோ மூலையில் “இன்று கோவை இரண்டாவது வார்டில் மக்கள் குடி தண்ணீருக்காக போராட்டம் நடத்தினார்கள்” என்கிற ரேஞ்சுக்கு சப்பையாக கூறிக் கொண்டு இருக்கிறார்கள். எழுத்தில் ஒரு ஆவேசம் வேண்டாமா! முக்கியத்துவம் வேண்டாமா! ஏன் தமிழக மக்களை மாக்களாக வைக்க இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள்.
பதிவர்களுக்கு (Bloggers) ஒரு பகிரங்க கேள்வி
ஈழத் தமிழர்களுக்காக, இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட மீனவர்களுக்காக எழுத்தின் மூலம் போராட்டம் செய்தீர்கள் அது ஏன் இந்திய மக்களுக்காக தற்போது ஒரு போராட்டம் நடக்கும் போது எதுவுமே நடக்காத மாதிரி வெட்டி அரசியல் பேச்சை பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். நமக்கு தமிழர்கள் முக்கியம் என்பது போல இந்தியாவும் முக்கியமில்லையா! வட மாநிலங்கள் தமிழர்களுக்காக குரல் கொடுக்கவில்லை அவர்கள் தமிழகத்தை புறக்கணிக்கிறார்கள் என்று கூறுகிறீர்கள். தமிழகம் இந்தியாவில் இல்லையா என்று உணர்ச்சி பொங்க கேட்டீர்கள். தற்போது பதிவர்கள் நடந்து கொள்வதைப் பார்த்தால் தமிழகம் இந்தியாவில் இல்லாததைப் போல தான் தோன்றுகிறது.
ஹசாரே போராட்டத்திற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல வழக்கமான அரசியல் பதிவுகளாக எழுதி தள்ளிக்கொண்டு இருக்கிறீர்கள். தற்போதையே தேவை ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு ஆனால் அதிகமாக எழுதப்படும் பதிவுகள் என்னவென்றால் கலைஞர், ஜெயா, கேப்டன், வைகோ, சீமான், வடிவேல், குஷ்பூ இவர்களைப் பற்றியே இருக்கிறது. இன்று திரட்டிகளில் சூடான இடுகைகள் (post) முழுவதும் இவை பற்றியே ஒன்று கூட ஹசாரே போராட்டத்தை பற்றி இல்லை. ஊடகங்களை காசுக்காக கேவலமாக எழுதுகிறார்கள் என்று திட்டும் உங்களை ஹிட்ஸ்க்காக நீங்கள் எழுதுகிறீர்கள் என்று ஏன் ஊடகங்கள் நினைக்கக்கூடாது?
இந்தியா முழுவதும் உள்ள மக்கள் இந்தப் போராட்டம் வெற்றி பெற்று நமக்கு ஒரு தீர்வு கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள் ஆனால் அது எதைப் பற்றியும் கவலைப்படாமல் வழக்கமான அரசியல் பதிவுகளாக எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள். தற்போதையே தேவை ஊழல் இல்லாத இந்தியாவா அல்லது யார் ஆட்சிக்கு வந்தாலும் செய்யும் ஊழலா! இதில் யாருக்கு ஆதரவாக எழுதி நமக்கு என்ன பயன்.
ஹசாரே போராட்டத்தைப்பற்றி வெகு சிலரே எழுதி வருகிறார்கள். ஒரு நான்கு பேர் பேசிக்கொண்டு இருப்பதால் என்ன பயன்? நாடு நன்றாக இருக்க வேண்டுமாம், ஊழலுக்கு எதிராக அரசியல்வாதிகள் பற்றி திட்டி எழுதி பொங்குவார்களாம் ஆனால் ஊழலுக்கு எதிராக ஒரு போராட்டம் நடந்தால் அது பற்றி கண்டுகொள்ள மாட்டார்களாம். என்னய்யா உங்க லாஜிக்? எதோ சாதாரண போராட்டம் என்றதால் கூட பரவாயில்லை இந்தியா முழுக்க பரவி அனைவரும் ஆர்வமாக பங்கு கொண்டு வருகிறார்கள் ஆனால் இங்கே!!! போங்கயா வயித்தெரிச்சலாக இருக்கிறது.
ரஜினி கமல் எங்கே?
தமிழகத்தில் சாதாரண மக்களுக்குத் தான் இது பற்றி தெரியவில்லை அல்லது அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் ஊடகங்கள் செய்து கொண்டு இருக்கின்றன ரஜினி கமல் போன்ற பிரபலங்களுக்கு என்ன வந்தது? ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? எது அவர்களை தடுக்கிறது. மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறவர்கள் ஏன் இதைப் போன்ற அருமையான வாய்ப்பை பயன்படுத்தக்கூடாது? இருவரும் அரசியல்வாதிகள் வீட்டிற்கு வந்தால் வாழ்த்துக் கூறுகிறார்கள் அதே போல ஹசாரேவும் வந்து நேரடியாக கேட்டால் தான் வாழ்த்துக் கூறுவார்களா!
இனியும் அமைதி காப்பது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய செயல் அல்ல. மக்கள் இருவரையும் உயர்ந்த இடத்தில் வைத்ததற்கு இருவரும் நன்றி கடன் பட்டு இருக்கிறார்கள் அதை இதைப்போன்ற தருணங்களில் இவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.
ரஜினி கமல் என்றில்லை ஒருத்தர் கூட ஆதரவு தரவில்லை. பாலிவுட்டில் அமிர்கான், ஹிர்திக், சேகர் கபூர் என்று ஏகப்பட்ட பிரபலங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து துணை நிற்கிறார்கள் ஆனால் இங்கே ஒரு நடிகர் கூட வாயைத் திறக்கவில்லை. ரசிகர்களே உங்கள் ரசிக பாசத்தை காட்ட இது தருணமல்ல தற்போது நமக்கு தேவை ஊழலற்ற இந்தியா. நாளைக்கு ஊழல் இல்லாத இந்தியா இருந்தால் தான் நமது குடும்பத்தினர் நிம்மதியாக இருக்க முடியும் இவர்களுக்கு என்ன நடந்தாலும் கவலையில்லை காரணம் இவர்களிடம் பணம் இருக்கிறது அதிகாரத்தின் ஆதரவு இருக்கிறது. எனவே இவர்களுக்காக பரிந்து பேசுவதாக நினைத்து உங்கள் வாழ்வை அழித்துக் கொள்ளாதீர்கள். நாளைக்கு நமக்கு ஏதாவது கஷ்டம் என்றால் இவர்கள் யாரும் வரப்போவதில்லை நம்முடைய பிரச்னைக்கு நாம் தான் போராட வேண்டும்.
எங்கே சென்றனர் தமிழக பிரபலங்கள்?
எந்த விஷயம் என்றாலும் வாய் கிழிய பேசும் பல தமிழக பிரபலங்கள் வாயை மூடிக்கொண்டு இருக்கின்றனர். தமிழகத்தில் இருந்து ஒருத்தர்… ஒருத்தர் கூட இதற்கு ஆதரவு தரவில்லை. ஏன் தமிழகம் இவ்வளவு கேவலமாக இருக்கிறது? அண்டை மாநிலமான கர்நாடகாவில் பட்டையைக் கிளப்பிக்கொண்டு இருக்கிறார்கள். நேற்று ஆந்திராவிலும் இதற்கு பேராதரவு தர துவங்கி விட்டார்கள் ஆனால் ஏன் தமிழகம் மட்டும் எதுவுமே நடக்காதது போல அமைதியாக இருக்கிறது.
இணையத்தில் நம்மைப்போல கொஞ்ச பேர் தான் இது பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம் இதனால் என்ன பயன்? பொது மக்கள் ஆதரவு இல்லாதவரை இங்கே என்ன கத்தியும் பிரயோஜனமில்லை என்னையும் சேர்த்தே கூறுகிறேன்.
இந்தியா முழுவதும் பேராதரவு (தமிழகம் தவிர்த்து)
இந்தியா முழுவதும் மக்கள் மிக ஆர்வமாக இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள். கிண்டலடித்துக்கொண்டு இருந்த இளைஞர்கள் கூட ஆதரவு பெருகி வருவதைக்கண்டு தங்கள் ஆதரவை வழங்கி வருகிறார்கள். அலுவலகம் செல்பவர்கள், குடும்பத் தலைவிகள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், இளைஞிகள், வயதானவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் ஹசாரேக்கு ஆதரவு தந்து அவரை அன்பில் திக்குமுக்காட வைத்து வருகிறார்கள்.
இது ஒரு நடுத்தர மக்கள் போராட்டம்
இந்தியாவில் நடுத்தர மக்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். ஹசாரே போராட்டம் நடுத்தர மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதால் அவருக்கு ஆதரவு பல்கிப்பெருகி வருவதாக வட இந்திய ஊடகங்கள் கூறி வருகின்றன. இது உண்மையும் கூட! ஒரு சராசரி குடிமகன் ஒவ்வொருவரின் எண்ணமும் ஊழல் இல்லாத இந்தியா தான்.
சக்கைப்போடு போடும் சமூகத்தளங்கள்
facebook, Twitter, Buzz போன்றவற்றில் நேற்று நொடிக்கு பத்து செய்தி இதைப்பற்றி பேசப்படுவதாக கூறப்பட்டுள்ளது. கூகுள் தேடுதலில் ஹசாரே பெயரே முதல் இடத்தை பிடித்துள்ளது. இதுவே மக்கள் இப்போராட்டத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு சாட்சி. facebook ல் இரு நாளில் ஒரு லட்சம் பேர் இதில் இணைந்துள்ளார்கள்.
பொதுமக்கள் ஆர்வம்
முன்பெல்லாம் போராட்டத்தில் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் பேச்சோடு நிறுத்தி விடுவார்கள் ஆனால் இப்போது குடும்பத்தலைவிகள், மாணவர்கள், வயதானவர்கள் என்று அனைவரும் நாங்கள் என்ன செய்ய வேண்டும்? எப்படி போராட்டத்தில் கலந்து கொள்வது? என்று ஆர்வமாக கேட்டு பங்கெடுத்து வருகிறார்கள். சென்னையில் கூட பலர் யாராவது இதை முன்னெடுக்க மாட்டார்களா என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள். பலர் அலுவலகத்திற்கு விடுமுறை போட்டுச் செல்லக்கூட தயாராக இருக்கிறார்கள். அந்த அளவிற்கு ஹசாரே போராட்டம் மக்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமாக இந்த அளவிற்கு ஆதரவு பெருகும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. இதில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம் மக்கள் ஊழல் அரசியல்வாதிகளால் எந்த அளவிற்கு நொந்து போய் இருக்கிறார்கள் என்று. ஒவ்வொரு சராசரி குடிமகனின் கோபம் தான் தற்போது இந்த எழுச்சியாக வெடிக்கிறது.
எகிப்து போல நம்ம நாட்டிலும் ஒரு மாற்றம் ஏற்படத்துவங்கியுள்ளது. இதை நீர்த்து போக விடாமல் வெற்றி பெற நாம் உதவ வேண்டும் அது நமது கடமை.
ஹசாரே
சரத் பவார் ராஜினாமா பற்றி ஹசாரே விடம் கேட்ட போது “சரத் பவார் போனால் இன்னொருத்தர் வரப்போகிறார்..எந்த மாற்றமும் வரப்போவதில்லை” என்று நச்சென்று கூறி இருக்கிறார். போராட்டம் வலுத்து வருவதைப் பார்த்து பயந்து போய் இருக்கிற மத்திய அரசு இந்தக்குழுவில் மக்கள் பாதி இருப்பார்கள் என்று ஏற்றுக்கொண்டு ஹசாரே இதன் தலைவராக இருக்கக்கூடாது என்று கூறியுள்ளது. இதற்கு பதிலடி தரும் விதமாக நான் இதன் தலைவராக இருக்கப்போவதாக கூறவில்லை அப்படிக் கூறினால் மக்கள் நான் இந்தப் பதவிக்காகத் தான் இதை செய்ததாக நினைத்து விடுவார்கள் எனவே இதில் நான் உறுப்பினராக மட்டுமே இருப்பேன் தலைவராக அல்ல என்று சரவெடியாக கூறி இருக்கிறார் அதோடு ஏற்றுக்கொண்டதை எழுத்துப்பூர்வமாக தராத வரை போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக கூறி விட்டார்.
புறக்கணிக்கும் ஊடகங்கள்
தமிழக ஊடகங்கள் எப்படி சீரழிந்து போய் இருக்கிறது என்பதற்கு தற்போதையே நிலையே சாட்சி. தொலைக்காட்சி செய்தி தாள்கள் எதிலும் இந்தப்போராட்டத்திற்கு ஆதரவு இல்லை. தினமலர், தினமணி மட்டுமே இன்றைய தலைப்பு செய்தியில் முக்கியத்துவம் கொடுத்து ஆறுதலை தந்து இருக்கிறது. தினமலர் மீது பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும் அதை நினைத்துப் பார்த்து பேசும் தருணம் இதுவல்ல. எந்த ஊடகமுமே இதற்கு உறுதியான ஆதரவு தராத போது இந்தபோராட்டத்திற்கு தினமலர் தினமணி கொடுத்த ஆதரவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
சன் டிவி செய்திகளில் நேற்றும் [7-4-2011] எதுவும் கூறவில்லை.. வெறுத்துப் போய் விட்டேன். இந்தியாவே இந்தப் போராட்டத்திற்காக அலறிக்கொண்டு இருக்கிறது ஆனால் எதுவுமே நடக்காத மாதிரி வழக்கமான செய்திகளை கூறிக்கொண்டு இருக்கிறார்கள் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல். எந்த அளவிற்கு கேவலமாக போய் கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.
மற்ற ஊடகங்கள் ஏன் இது பற்றி பெரிதாக பேசவில்லை? எதற்கு தயங்குகிறார்கள்? சராசரி குடிமகனைப் போல தயங்கும் ஊடகத்திற்கு இது கேவலமாக இல்லையா! கொஞ்சம் கூடவா சூடு சொரணை இல்லை. மக்களால் தான் அவர்கள் வளருகிறார்கள் ஆனால் இன்று மக்களுக்காக ஒரு போராட்டம் வெடித்து இருக்கும் போது ஏன் ஆதரவு தர மறுக்கிறார்கள். ஊடகங்கள் செய்திகளை அதுவும் இதைப்போல செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது முக்கிய கடமையில்லையா! ஏன் கூற மறுக்கிறார்கள்? ஏன் மக்கள் இது பற்றி தெரிந்து கொள்ள உதவ மறுக்கிறார்கள்?
கூறுபவர்கள் கூட எதோ மூலையில் “இன்று கோவை இரண்டாவது வார்டில் மக்கள் குடி தண்ணீருக்காக போராட்டம் நடத்தினார்கள்” என்கிற ரேஞ்சுக்கு சப்பையாக கூறிக் கொண்டு இருக்கிறார்கள். எழுத்தில் ஒரு ஆவேசம் வேண்டாமா! முக்கியத்துவம் வேண்டாமா! ஏன் தமிழக மக்களை மாக்களாக வைக்க இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள்.
பதிவர்களுக்கு (Bloggers) ஒரு பகிரங்க கேள்வி
ஈழத் தமிழர்களுக்காக, இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட மீனவர்களுக்காக எழுத்தின் மூலம் போராட்டம் செய்தீர்கள் அது ஏன் இந்திய மக்களுக்காக தற்போது ஒரு போராட்டம் நடக்கும் போது எதுவுமே நடக்காத மாதிரி வெட்டி அரசியல் பேச்சை பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். நமக்கு தமிழர்கள் முக்கியம் என்பது போல இந்தியாவும் முக்கியமில்லையா! வட மாநிலங்கள் தமிழர்களுக்காக குரல் கொடுக்கவில்லை அவர்கள் தமிழகத்தை புறக்கணிக்கிறார்கள் என்று கூறுகிறீர்கள். தமிழகம் இந்தியாவில் இல்லையா என்று உணர்ச்சி பொங்க கேட்டீர்கள். தற்போது பதிவர்கள் நடந்து கொள்வதைப் பார்த்தால் தமிழகம் இந்தியாவில் இல்லாததைப் போல தான் தோன்றுகிறது.
ஹசாரே போராட்டத்திற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல வழக்கமான அரசியல் பதிவுகளாக எழுதி தள்ளிக்கொண்டு இருக்கிறீர்கள். தற்போதையே தேவை ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு ஆனால் அதிகமாக எழுதப்படும் பதிவுகள் என்னவென்றால் கலைஞர், ஜெயா, கேப்டன், வைகோ, சீமான், வடிவேல், குஷ்பூ இவர்களைப் பற்றியே இருக்கிறது. இன்று திரட்டிகளில் சூடான இடுகைகள் (post) முழுவதும் இவை பற்றியே ஒன்று கூட ஹசாரே போராட்டத்தை பற்றி இல்லை. ஊடகங்களை காசுக்காக கேவலமாக எழுதுகிறார்கள் என்று திட்டும் உங்களை ஹிட்ஸ்க்காக நீங்கள் எழுதுகிறீர்கள் என்று ஏன் ஊடகங்கள் நினைக்கக்கூடாது?
இந்தியா முழுவதும் உள்ள மக்கள் இந்தப் போராட்டம் வெற்றி பெற்று நமக்கு ஒரு தீர்வு கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள் ஆனால் அது எதைப் பற்றியும் கவலைப்படாமல் வழக்கமான அரசியல் பதிவுகளாக எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள். தற்போதையே தேவை ஊழல் இல்லாத இந்தியாவா அல்லது யார் ஆட்சிக்கு வந்தாலும் செய்யும் ஊழலா! இதில் யாருக்கு ஆதரவாக எழுதி நமக்கு என்ன பயன்.
ஹசாரே போராட்டத்தைப்பற்றி வெகு சிலரே எழுதி வருகிறார்கள். ஒரு நான்கு பேர் பேசிக்கொண்டு இருப்பதால் என்ன பயன்? நாடு நன்றாக இருக்க வேண்டுமாம், ஊழலுக்கு எதிராக அரசியல்வாதிகள் பற்றி திட்டி எழுதி பொங்குவார்களாம் ஆனால் ஊழலுக்கு எதிராக ஒரு போராட்டம் நடந்தால் அது பற்றி கண்டுகொள்ள மாட்டார்களாம். என்னய்யா உங்க லாஜிக்? எதோ சாதாரண போராட்டம் என்றதால் கூட பரவாயில்லை இந்தியா முழுக்க பரவி அனைவரும் ஆர்வமாக பங்கு கொண்டு வருகிறார்கள் ஆனால் இங்கே!!! போங்கயா வயித்தெரிச்சலாக இருக்கிறது.
ரஜினி கமல் எங்கே?
தமிழகத்தில் சாதாரண மக்களுக்குத் தான் இது பற்றி தெரியவில்லை அல்லது அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் ஊடகங்கள் செய்து கொண்டு இருக்கின்றன ரஜினி கமல் போன்ற பிரபலங்களுக்கு என்ன வந்தது? ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? எது அவர்களை தடுக்கிறது. மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறவர்கள் ஏன் இதைப் போன்ற அருமையான வாய்ப்பை பயன்படுத்தக்கூடாது? இருவரும் அரசியல்வாதிகள் வீட்டிற்கு வந்தால் வாழ்த்துக் கூறுகிறார்கள் அதே போல ஹசாரேவும் வந்து நேரடியாக கேட்டால் தான் வாழ்த்துக் கூறுவார்களா!
இனியும் அமைதி காப்பது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய செயல் அல்ல. மக்கள் இருவரையும் உயர்ந்த இடத்தில் வைத்ததற்கு இருவரும் நன்றி கடன் பட்டு இருக்கிறார்கள் அதை இதைப்போன்ற தருணங்களில் இவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.
ரஜினி கமல் என்றில்லை ஒருத்தர் கூட ஆதரவு தரவில்லை. பாலிவுட்டில் அமிர்கான், ஹிர்திக், சேகர் கபூர் என்று ஏகப்பட்ட பிரபலங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து துணை நிற்கிறார்கள் ஆனால் இங்கே ஒரு நடிகர் கூட வாயைத் திறக்கவில்லை. ரசிகர்களே உங்கள் ரசிக பாசத்தை காட்ட இது தருணமல்ல தற்போது நமக்கு தேவை ஊழலற்ற இந்தியா. நாளைக்கு ஊழல் இல்லாத இந்தியா இருந்தால் தான் நமது குடும்பத்தினர் நிம்மதியாக இருக்க முடியும் இவர்களுக்கு என்ன நடந்தாலும் கவலையில்லை காரணம் இவர்களிடம் பணம் இருக்கிறது அதிகாரத்தின் ஆதரவு இருக்கிறது. எனவே இவர்களுக்காக பரிந்து பேசுவதாக நினைத்து உங்கள் வாழ்வை அழித்துக் கொள்ளாதீர்கள். நாளைக்கு நமக்கு ஏதாவது கஷ்டம் என்றால் இவர்கள் யாரும் வரப்போவதில்லை நம்முடைய பிரச்னைக்கு நாம் தான் போராட வேண்டும்.
எங்கே சென்றனர் தமிழக பிரபலங்கள்?
எந்த விஷயம் என்றாலும் வாய் கிழிய பேசும் பல தமிழக பிரபலங்கள் வாயை மூடிக்கொண்டு இருக்கின்றனர். தமிழகத்தில் இருந்து ஒருத்தர்… ஒருத்தர் கூட இதற்கு ஆதரவு தரவில்லை. ஏன் தமிழகம் இவ்வளவு கேவலமாக இருக்கிறது? அண்டை மாநிலமான கர்நாடகாவில் பட்டையைக் கிளப்பிக்கொண்டு இருக்கிறார்கள். நேற்று ஆந்திராவிலும் இதற்கு பேராதரவு தர துவங்கி விட்டார்கள் ஆனால் ஏன் தமிழகம் மட்டும் எதுவுமே நடக்காதது போல அமைதியாக இருக்கிறது.
இணையத்தில் நம்மைப்போல கொஞ்ச பேர் தான் இது பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம் இதனால் என்ன பயன்? பொது மக்கள் ஆதரவு இல்லாதவரை இங்கே என்ன கத்தியும் பிரயோஜனமில்லை என்னையும் சேர்த்தே கூறுகிறேன்.
இந்தியா முழுவதும் பேராதரவு (தமிழகம் தவிர்த்து)
இந்தியா முழுவதும் மக்கள் மிக ஆர்வமாக இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள். கிண்டலடித்துக்கொண்டு இருந்த இளைஞர்கள் கூட ஆதரவு பெருகி வருவதைக்கண்டு தங்கள் ஆதரவை வழங்கி வருகிறார்கள். அலுவலகம் செல்பவர்கள், குடும்பத் தலைவிகள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், இளைஞிகள், வயதானவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் ஹசாரேக்கு ஆதரவு தந்து அவரை அன்பில் திக்குமுக்காட வைத்து வருகிறார்கள்.
இது ஒரு நடுத்தர மக்கள் போராட்டம்
இந்தியாவில் நடுத்தர மக்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். ஹசாரே போராட்டம் நடுத்தர மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதால் அவருக்கு ஆதரவு பல்கிப்பெருகி வருவதாக வட இந்திய ஊடகங்கள் கூறி வருகின்றன. இது உண்மையும் கூட! ஒரு சராசரி குடிமகன் ஒவ்வொருவரின் எண்ணமும் ஊழல் இல்லாத இந்தியா தான்.
சக்கைப்போடு போடும் சமூகத்தளங்கள்
facebook, Twitter, Buzz போன்றவற்றில் நேற்று நொடிக்கு பத்து செய்தி இதைப்பற்றி பேசப்படுவதாக கூறப்பட்டுள்ளது. கூகுள் தேடுதலில் ஹசாரே பெயரே முதல் இடத்தை பிடித்துள்ளது. இதுவே மக்கள் இப்போராட்டத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு சாட்சி. facebook ல் இரு நாளில் ஒரு லட்சம் பேர் இதில் இணைந்துள்ளார்கள்.
பொதுமக்கள் ஆர்வம்
முன்பெல்லாம் போராட்டத்தில் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் பேச்சோடு நிறுத்தி விடுவார்கள் ஆனால் இப்போது குடும்பத்தலைவிகள், மாணவர்கள், வயதானவர்கள் என்று அனைவரும் நாங்கள் என்ன செய்ய வேண்டும்? எப்படி போராட்டத்தில் கலந்து கொள்வது? என்று ஆர்வமாக கேட்டு பங்கெடுத்து வருகிறார்கள். சென்னையில் கூட பலர் யாராவது இதை முன்னெடுக்க மாட்டார்களா என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள். பலர் அலுவலகத்திற்கு விடுமுறை போட்டுச் செல்லக்கூட தயாராக இருக்கிறார்கள். அந்த அளவிற்கு ஹசாரே போராட்டம் மக்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமாக இந்த அளவிற்கு ஆதரவு பெருகும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. இதில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம் மக்கள் ஊழல் அரசியல்வாதிகளால் எந்த அளவிற்கு நொந்து போய் இருக்கிறார்கள் என்று. ஒவ்வொரு சராசரி குடிமகனின் கோபம் தான் தற்போது இந்த எழுச்சியாக வெடிக்கிறது.
எகிப்து போல நம்ம நாட்டிலும் ஒரு மாற்றம் ஏற்படத்துவங்கியுள்ளது. இதை நீர்த்து போக விடாமல் வெற்றி பெற நாம் உதவ வேண்டும் அது நமது கடமை.
ஹசாரே
சரத் பவார் ராஜினாமா பற்றி ஹசாரே விடம் கேட்ட போது “சரத் பவார் போனால் இன்னொருத்தர் வரப்போகிறார்..எந்த மாற்றமும் வரப்போவதில்லை” என்று நச்சென்று கூறி இருக்கிறார். போராட்டம் வலுத்து வருவதைப் பார்த்து பயந்து போய் இருக்கிற மத்திய அரசு இந்தக்குழுவில் மக்கள் பாதி இருப்பார்கள் என்று ஏற்றுக்கொண்டு ஹசாரே இதன் தலைவராக இருக்கக்கூடாது என்று கூறியுள்ளது. இதற்கு பதிலடி தரும் விதமாக நான் இதன் தலைவராக இருக்கப்போவதாக கூறவில்லை அப்படிக் கூறினால் மக்கள் நான் இந்தப் பதவிக்காகத் தான் இதை செய்ததாக நினைத்து விடுவார்கள் எனவே இதில் நான் உறுப்பினராக மட்டுமே இருப்பேன் தலைவராக அல்ல என்று சரவெடியாக கூறி இருக்கிறார் அதோடு ஏற்றுக்கொண்டதை எழுத்துப்பூர்வமாக தராத வரை போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக கூறி விட்டார்.
நன்றி (செய்தி ) :- கிரி Blog
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக