டெல்லி.மார்ச்.5:காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான அர்ஜூன் சிங் நேற்று காலமானார்.
நெஞ்சு வலி மற்றும் நரம்பு பிரச்சனை தொடர்பாக டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை 6.15 மணியளவில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நேரு குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமாகயிருந்த அர்ஜூன் சிங் பல நேரங்களில் காங்கிரஸ் கட்சிக்கு தலைவலியையும் ஏற்படுத்தி வந்தவர். நேரு குடும்பத்துடன் நெருக்கமாகவும், கட்சியில் 2-ஆம் நிலை தலைவராக பதவி வகித்தபொழுதும் அர்ஜூன் சிங்கால் பிரதமராக இயலவில்லை. இதில் வேதனையான நிகழ்வு என்னவென்றால் அர்ஜூன் சிங் மரணிப்பதற்கு சற்று முன்புதான் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டார்.
போபால் விஷவாயு துயர சம்பவத்தில் யூனியன் கார்பைடு சேர்மன் வாரன் ஆண்டர்சனுக்கு உதவினார் என்ற பழியையும் தனது கடைசி காலத்தில் சுமக்கவேண்டிய சூழல் அர்ஜூன் சிங்குக்கு ஏற்பட்டது.
1984-ஆம் ஆண்டு போபால் துயரசம்பவம்தான் அர்ஜூன் சிங்கின் அரசியல் வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய நெருக்கடியாகும். அப்பொழுது அர்ஜூன் சிங் மத்தியபிரதேச மாநில முதல்வராக பதவி வகித்துவந்தார். போபால் விஷவாயு துயரசம்பவத்தை எவ்வாறு கையாளவேண்டுமென தெரியாமல் அர்ஜூன்சிங்கின் அரசு திகைத்து நின்றதாக இதுத் தொடர்பான ஏராளமான புத்தகங்களில் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு பின்னர் நரசிம்மராவ் அமைச்சரவையிலிருந்து ராஜினாமாச் செய்தார் அர்ஜூன்சிங். ஆனாலும், நேருவின் குடும்பத்துடனான உறவை அவர் விடவில்லை. பின்னர் திவாரி காங்கிரஸில் சேர்ந்த அர்ஜூன்சிங் தாமதமில்லாமல் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் அர்ஜூன் சிங்கிற்கும் பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
முஸ்லிம்கள் மற்றும் பிற்பட்ட வகுப்பினருக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொள்பவராகத்தான் அர்ஜூன் சிங் இருந்தார். இப்பிரிவினர் அர்ஜூன் சிங்கின் வாக்கு வங்கிகளாக இல்லாத பொழுதும் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட சம்பவத்தில் காங்கிரஸ் கட்சி மன்னிப்புக் கோரவேண்டும் என பகிரங்கமாக அறிக்கை விடுத்தார்.
காங்கிரஸ் கட்சியின் உயர்ஜாதி மேலாதிக்கத்திற்கு சவாலாக விளங்கினார் அர்ஜூன் சிங். மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தபொழுது முஸ்லிம்கள் உள்பட இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உயர்கல்வியில் இடஒதுக்கீட்டை கொண்டுவரவும் அர்ஜூன் சிங் தயங்கவில்லை.
பூலான் தேவியை சரணடைய வைத்தவர்
நாட்டையே அதிர வைத்த பிரபல கொள்ளைக்காரி பூலான் தேவி, ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடைய முன்வந்தபோது அப்போதைய ம..பி முதல்வராக இருந்த அர்ஜூன் சிங் முன்னிலையி்ல்தான் சரணடைய விருப்பம் தெரிவித்தார். அதேபோல அர்ஜூன் சிங் முன்புதான் அவர் ஆயுதங்களைப் போட்டு சரணடைந்தார் பூலான் தேவி.
பூலான் தேவி சரணடையும் விவகாரத்தில் முக்கியப் பங்காற்றியவர் அர்ஜூன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
இட ஒதுக்கீட்டுக்காக பாடுபட்டவர்
அர்ஜூன் சிங் மீது பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் கூட இந்தியாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக அவரும் விளங்கினார். குறிப்பாக பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் மிகவும் முக்கியமான பங்காற்றியவர் அர்ஜூன் சிங்.
அரசு உதவி பெறாத தனியார்ர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற சட்ட மசோதாவைக் கொண்டு வந்தவர் அர்ஜூன் சிங்.
மேலும் ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் அர்ஜூன் சிங்.
மேலும், அர்ஜூன் சிங், மன்மோகன் சிங் அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது 32 மத்திய கல்வி நிலையங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டு வந்த பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 100க்கும் மேற்பட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் செயல்படுத்த முயற்சி எடுத்து வந்தார்.
தனது இறுதிக் காலத்தில் காங்கிரஸ் தலைமையுடன் அவர் ஒத்துப் போக முன்வராததால் கட்சியால் கிட்டத்தட்ட கைவிடப்பட்டார். அரசியலிருந்தும் ஒதுங்கினார்.
காரியக் கமிட்டியிலிருந்து நீக்கியதும் மரணம்
இன்று பிற்பகலில்தான் காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர் பொறுப்பிலிருந்து அர்ஜூன் சிங்கை நீக்கியிருந்தனர். இந்த நிலையில் மாலையில் அவர் மரணமடைந்துள்ளார்.
அர்ஜூன் சிங் தனது கடைசிக் காலத்தில் போபால் துயரசம்பவம் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகள், காங்கிரஸ் கட்சியின் புறக்கணிப்பு ஆகியவற்றால் வேதனையடைந்தார். காங்கிரஸ் கட்சியின் புறக்கணிப்பை பொறுக்க முடியாமல் ஒருமுறை மேடையில் வைத்து கண்ணீர் விட்டு அழுதார். இவ்வேதனைகளை மீதம் வைத்துவிட்டு அர்ஜூன் சிங் மரணமடைந்துள்ளார்.
அர்ஜூன் சிங்கின் மரணத்திற்கு சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் இ.அபூபக்கர் அனுதாபம் தெரிவித்துள்ளார். முஸ்லிம் சிறுபான்மையினருக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் மிகவும் நம்பிக்கையை அளித்த தலைவர் என இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ், பாலைவனத் தூது
நெஞ்சு வலி மற்றும் நரம்பு பிரச்சனை தொடர்பாக டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை 6.15 மணியளவில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நேரு குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமாகயிருந்த அர்ஜூன் சிங் பல நேரங்களில் காங்கிரஸ் கட்சிக்கு தலைவலியையும் ஏற்படுத்தி வந்தவர். நேரு குடும்பத்துடன் நெருக்கமாகவும், கட்சியில் 2-ஆம் நிலை தலைவராக பதவி வகித்தபொழுதும் அர்ஜூன் சிங்கால் பிரதமராக இயலவில்லை. இதில் வேதனையான நிகழ்வு என்னவென்றால் அர்ஜூன் சிங் மரணிப்பதற்கு சற்று முன்புதான் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டார்.
போபால் விஷவாயு துயர சம்பவத்தில் யூனியன் கார்பைடு சேர்மன் வாரன் ஆண்டர்சனுக்கு உதவினார் என்ற பழியையும் தனது கடைசி காலத்தில் சுமக்கவேண்டிய சூழல் அர்ஜூன் சிங்குக்கு ஏற்பட்டது.
1984-ஆம் ஆண்டு போபால் துயரசம்பவம்தான் அர்ஜூன் சிங்கின் அரசியல் வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய நெருக்கடியாகும். அப்பொழுது அர்ஜூன் சிங் மத்தியபிரதேச மாநில முதல்வராக பதவி வகித்துவந்தார். போபால் விஷவாயு துயரசம்பவத்தை எவ்வாறு கையாளவேண்டுமென தெரியாமல் அர்ஜூன்சிங்கின் அரசு திகைத்து நின்றதாக இதுத் தொடர்பான ஏராளமான புத்தகங்களில் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு பின்னர் நரசிம்மராவ் அமைச்சரவையிலிருந்து ராஜினாமாச் செய்தார் அர்ஜூன்சிங். ஆனாலும், நேருவின் குடும்பத்துடனான உறவை அவர் விடவில்லை. பின்னர் திவாரி காங்கிரஸில் சேர்ந்த அர்ஜூன்சிங் தாமதமில்லாமல் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் அர்ஜூன் சிங்கிற்கும் பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
முஸ்லிம்கள் மற்றும் பிற்பட்ட வகுப்பினருக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொள்பவராகத்தான் அர்ஜூன் சிங் இருந்தார். இப்பிரிவினர் அர்ஜூன் சிங்கின் வாக்கு வங்கிகளாக இல்லாத பொழுதும் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட சம்பவத்தில் காங்கிரஸ் கட்சி மன்னிப்புக் கோரவேண்டும் என பகிரங்கமாக அறிக்கை விடுத்தார்.
காங்கிரஸ் கட்சியின் உயர்ஜாதி மேலாதிக்கத்திற்கு சவாலாக விளங்கினார் அர்ஜூன் சிங். மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தபொழுது முஸ்லிம்கள் உள்பட இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உயர்கல்வியில் இடஒதுக்கீட்டை கொண்டுவரவும் அர்ஜூன் சிங் தயங்கவில்லை.
பூலான் தேவியை சரணடைய வைத்தவர்
நாட்டையே அதிர வைத்த பிரபல கொள்ளைக்காரி பூலான் தேவி, ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடைய முன்வந்தபோது அப்போதைய ம..பி முதல்வராக இருந்த அர்ஜூன் சிங் முன்னிலையி்ல்தான் சரணடைய விருப்பம் தெரிவித்தார். அதேபோல அர்ஜூன் சிங் முன்புதான் அவர் ஆயுதங்களைப் போட்டு சரணடைந்தார் பூலான் தேவி.
பூலான் தேவி சரணடையும் விவகாரத்தில் முக்கியப் பங்காற்றியவர் அர்ஜூன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
இட ஒதுக்கீட்டுக்காக பாடுபட்டவர்
அர்ஜூன் சிங் மீது பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் கூட இந்தியாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக அவரும் விளங்கினார். குறிப்பாக பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் மிகவும் முக்கியமான பங்காற்றியவர் அர்ஜூன் சிங்.
அரசு உதவி பெறாத தனியார்ர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற சட்ட மசோதாவைக் கொண்டு வந்தவர் அர்ஜூன் சிங்.
மேலும் ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் அர்ஜூன் சிங்.
மேலும், அர்ஜூன் சிங், மன்மோகன் சிங் அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது 32 மத்திய கல்வி நிலையங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டு வந்த பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 100க்கும் மேற்பட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் செயல்படுத்த முயற்சி எடுத்து வந்தார்.
தனது இறுதிக் காலத்தில் காங்கிரஸ் தலைமையுடன் அவர் ஒத்துப் போக முன்வராததால் கட்சியால் கிட்டத்தட்ட கைவிடப்பட்டார். அரசியலிருந்தும் ஒதுங்கினார்.
காரியக் கமிட்டியிலிருந்து நீக்கியதும் மரணம்
இன்று பிற்பகலில்தான் காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர் பொறுப்பிலிருந்து அர்ஜூன் சிங்கை நீக்கியிருந்தனர். இந்த நிலையில் மாலையில் அவர் மரணமடைந்துள்ளார்.
அர்ஜூன் சிங் தனது கடைசிக் காலத்தில் போபால் துயரசம்பவம் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகள், காங்கிரஸ் கட்சியின் புறக்கணிப்பு ஆகியவற்றால் வேதனையடைந்தார். காங்கிரஸ் கட்சியின் புறக்கணிப்பை பொறுக்க முடியாமல் ஒருமுறை மேடையில் வைத்து கண்ணீர் விட்டு அழுதார். இவ்வேதனைகளை மீதம் வைத்துவிட்டு அர்ஜூன் சிங் மரணமடைந்துள்ளார்.
அர்ஜூன் சிங்கின் மரணத்திற்கு சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் இ.அபூபக்கர் அனுதாபம் தெரிவித்துள்ளார். முஸ்லிம் சிறுபான்மையினருக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் மிகவும் நம்பிக்கையை அளித்த தலைவர் என இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ், பாலைவனத் தூது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக