காவோ: 90 மில்லியன் யூரோ கொடுத்தால் தான் 4 பிரெஞ்சு பணயக் கைதிகளை விடுவிப்போம் என்று அல் கொய்தாவின் வட ஆப்பிரிக்க கிளை தெரிவித்துள்ளது. இவர்கள் 4 பேரும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் அல் கொய்தாவின் பிடியில் உள்ளனர்.
இந்த நிபந்தனையை ஏற்க பிரான்ஸ் அரசு மறுத்துவிட்டது. பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் சிறைகளில் இருக்கும் அல் கொய்தாவினரை விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் நிபந்தனை விதித்திருந்தனர்.
வடக்கு மாலியில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துபவர்களுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது,
அவர்கள் பிடியில் இருக்கும் 4 பிரெஞ்சு பணயக்கைதிகளை விடுவிக்க கடத்தல்காரர்கள் குறைந்தது 90 மில்லியன் யூரோ வேண்டும் என்று கேட்கின்றனர். மேலும், பிரான்ஸ் உள்ளிட்ட நாட்டு சிறைகளில் இருக்கும் அல் கொய்தாவினரை விடுதலை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர் என்றார்.
கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நைஜரின் யுரேனியச் சுரங்க நகரமான ஆரிலிட்டில் இருந்து கடத்தப்பட்டவர்களில் இந்த 4 பிரான்ஸ் நாட்டவர்களும் அடக்கம். அவர்கள் அனைவரும் மாலிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி பிணைத்தொகை கொடுத்தபிறகு பிடித்து வைத்திருந்தவர்களில் 3 பேர் விடுவிக்கப்பட்டனர். கடத்தப்பட்ட ஆண்கள் அனைவரும் பிரான்ஸின் முன்னணி அணு சக்தி நிறுவனமான அரீவா அல்லது அதன் துணை நிறவனங்களில் பணி புரிந்தவர்கள்.
இந்த கடத்தலுக்கு அல் கொய்தா இஸ்லாமிக் மக்ரெப் அமைப்பின் தலைவர் பொறுப்பேற்றார். அவர் பிரெஞ்சு பணயக்கைதிகள் பத்திரமாக நாடு திருமப வேண்டும் என்றால் உடனே ஆப்கானிஸ்தானில் இருந்து பிரெஞ்சு படையை திரும்பப் பெற வேண்டும் என்று அந்நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
கடந்த நவம்பர் மாதம் 18-ம் தேதி அன்று இந்த அமைப்பு பணயக் கைதிகள் பற்றி அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனிடம் நேரடியாக பேசுமாறு கூறியது. அடுத்தவர்கள் கூறும் வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாரீஸ் தெரிவித்தது.
நாங்கள் நீண்ட மற்றும் சிக்கல்கள் நிறைந்த பேச்சுவார்த்தையை எதிர்பார்க்கிறோம். ஆனால் இதில் நம்பிக்கை உண்டு என்று பேச்சுவார்த்தை நடத்துபவர்களுக்கு நெருக்கமான மாலியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
ப்ரூஷெல்ஸில் நடந்த கூட்டத்தின்போது பிரெஞ்சு வெளியுறவுத் துறை அமைச்சர் பிணைத் தொகை கொடுக்க மறுத்துவிட்டார். இந்த அடிப்படையில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்றார்.
அல் கொய்தாவின் வட ஆப்பிரிக்க கிளை அல்ஜீரியா, மொரிஷானியா, மாலி மற்றும் நைஜரில் மேற்கத்தியர்களை தாக்குவது, கடத்துவது போன்ற வேலைகளைச் செய்து வருகிறது.
பிரெஞ்சு பணயக்கைதிகள் விரைவில் நாடு திரும்புவார்கள் என்று தான் அதீத நம்பிக்கை கொண்டுள்ளதாக அரீவா குழுமத்தின்தலைவர் கடந்த 4-ம் தேதி தெரிவித்துள்ளார்.
இந்த நிபந்தனையை ஏற்க பிரான்ஸ் அரசு மறுத்துவிட்டது. பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் சிறைகளில் இருக்கும் அல் கொய்தாவினரை விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் நிபந்தனை விதித்திருந்தனர்.
வடக்கு மாலியில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துபவர்களுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது,
அவர்கள் பிடியில் இருக்கும் 4 பிரெஞ்சு பணயக்கைதிகளை விடுவிக்க கடத்தல்காரர்கள் குறைந்தது 90 மில்லியன் யூரோ வேண்டும் என்று கேட்கின்றனர். மேலும், பிரான்ஸ் உள்ளிட்ட நாட்டு சிறைகளில் இருக்கும் அல் கொய்தாவினரை விடுதலை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர் என்றார்.
கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நைஜரின் யுரேனியச் சுரங்க நகரமான ஆரிலிட்டில் இருந்து கடத்தப்பட்டவர்களில் இந்த 4 பிரான்ஸ் நாட்டவர்களும் அடக்கம். அவர்கள் அனைவரும் மாலிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி பிணைத்தொகை கொடுத்தபிறகு பிடித்து வைத்திருந்தவர்களில் 3 பேர் விடுவிக்கப்பட்டனர். கடத்தப்பட்ட ஆண்கள் அனைவரும் பிரான்ஸின் முன்னணி அணு சக்தி நிறுவனமான அரீவா அல்லது அதன் துணை நிறவனங்களில் பணி புரிந்தவர்கள்.
இந்த கடத்தலுக்கு அல் கொய்தா இஸ்லாமிக் மக்ரெப் அமைப்பின் தலைவர் பொறுப்பேற்றார். அவர் பிரெஞ்சு பணயக்கைதிகள் பத்திரமாக நாடு திருமப வேண்டும் என்றால் உடனே ஆப்கானிஸ்தானில் இருந்து பிரெஞ்சு படையை திரும்பப் பெற வேண்டும் என்று அந்நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
கடந்த நவம்பர் மாதம் 18-ம் தேதி அன்று இந்த அமைப்பு பணயக் கைதிகள் பற்றி அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனிடம் நேரடியாக பேசுமாறு கூறியது. அடுத்தவர்கள் கூறும் வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாரீஸ் தெரிவித்தது.
நாங்கள் நீண்ட மற்றும் சிக்கல்கள் நிறைந்த பேச்சுவார்த்தையை எதிர்பார்க்கிறோம். ஆனால் இதில் நம்பிக்கை உண்டு என்று பேச்சுவார்த்தை நடத்துபவர்களுக்கு நெருக்கமான மாலியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
ப்ரூஷெல்ஸில் நடந்த கூட்டத்தின்போது பிரெஞ்சு வெளியுறவுத் துறை அமைச்சர் பிணைத் தொகை கொடுக்க மறுத்துவிட்டார். இந்த அடிப்படையில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்றார்.
அல் கொய்தாவின் வட ஆப்பிரிக்க கிளை அல்ஜீரியா, மொரிஷானியா, மாலி மற்றும் நைஜரில் மேற்கத்தியர்களை தாக்குவது, கடத்துவது போன்ற வேலைகளைச் செய்து வருகிறது.
பிரெஞ்சு பணயக்கைதிகள் விரைவில் நாடு திரும்புவார்கள் என்று தான் அதீத நம்பிக்கை கொண்டுள்ளதாக அரீவா குழுமத்தின்தலைவர் கடந்த 4-ம் தேதி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக