31 ஆகஸ்ட் 2010

உலக சுகாதார தினம்

விமானத்தில் வீசியெறிந்த குண்டுகள்
இரத்த சகதியாக்கின எம் வீதிகளை

சுதந்திரமாக சுவாசித்த காற்றுக்கூட
சுகாதாரமற்றுப் போனது

சிதறிய துகள்கள் எம் விழிப்படலத்தை
கரும்படலமாக மாற்றியது

வெடி ஓசையின் வேள்வியில்
எம் கேள்விப்புலனும் பறிபோனது

கருவறை கூட கந்தக நிலமானது
சடலங்களின் சங்கமத்தில்
சனநாயகம் மலந்ததாம்

குற்றுயிரும் குருதியுமாய்
உறுப்பிழந்த குழந்தைகள்
இது பிறப்பின் ஊனம் அல்ல
ஏகாதிபத்தியம் எம்மீது
கொண்ட வெறுப்பின் ஈனம்

குடலை அறுக்கும் பசியினால்
குப்பைத்தொட்டியில் நாயுடன்
குடுமிப்பிடி சண்டையிட்டவன்
கிடைத்த உணவை
உண்ண நினைத்தபொழுது உள்ளத்தில்
நிழலாடியது இன்று
உலக சுகாதார தினம் என்று
-ஆயிஷா மைந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக